articles

உணவு, உடை, உறைவிடம் மோடி அரசின் மெகா தோல்வி - ஆஷி குப்தா, வாணி எல் குல்கர்னி, ராகவ் கைகா

ஒ ன்றிய ஆளும் கட்சியின் மீதான “நம்பிக்கை யால்” மக்களின் அடிப்படை உரிமையான உணவு மற்றும் வாழ்விடத்தை பெறுவதில் சந்திக்கும் நெருக்கடிகள் மேலும் மோசமாகியுள்ளன.

1974 ஆம் ஆண்டில் மனோஜ் குமார் தயாரித்து இயக்கிய இந்தி திரைப்படம்” ரொட்டி, கபடா அவுர் மக்கான்” (உணவு, உடை மற்றும் உறைவிடம்). நேர் மையாக வாழும் ஒரு மனிதன் சந்திக்கின்ற இழப்பு மற்றும் பேரழிவுகளை இந்தப் படம் கடுமையாகச் சித்தரிக்கிறது. 

பற்றாக்குறை பிரச்சனை, அவனை வாழ்நாள் முழு வதும் அதிக விலையை கொடுப்பவனாக மாற்றி விடும். உதாரணமாக, ஊட்டச்சத்து குறைபாடினால் குழந்தை களின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும். வளர்ச்சி குன்றிய நிலை தனி நபர்களின் ஆரோக்கியத்திற்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். அறிவாற்றல் குறை பாடு,கல்வி மற்றும் செயல்திறன் இழப்பு, குறைவான ஊதியத்தில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், உற்பத்தி திறன் இழப்பு, குழந்தைப் பருவத்தின் பிற்பகுதி யில் நேரும் எடை அதிகரிப்பு, ஊட்டச்சத்து தொடர்பான நாள்பட்ட நோய்கள் தாக்கும் ஆபத்து என எல்லாமே இதற்குள் அடங்கும்.( உலக சுகாதார அமைப்பின் 2015 ஆம் ஆண்டின் அறிக்கை).

எனவே, உணவு நெருக்கடி, வாழ்விடங்கள் போதா மை ஆகியவற்றால் ஏற்பட்ட இழப்புகள் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் குறைந்ததா அல்லது அதிகரித்ததா என்பதை பார்ப்போம்.

பஞ்சத்தின் காரணம் என்ன?

பட்டினி என்பது உணவுப் பற்றாக்குறையால் ஏற்படு வதில்லை. உணவைப் பெற முடியாமல், வாங்கும் சக்தி வீழ்ச்சியால் ஏற்படுகிறது.அதேபோல தங்குமிடம் பற்றாக்குறை வீடுகள் காலியாக இல்லாததால் அல்ல. வாடகை கொடுப்பதற்கு போதிய வருமானம் இல்லாத தால் தான். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் 1981 இல் மேற்கொண்ட பஞ்சங்கள் பற்றிய தனது உன்னதமான ஆய்வில் இதனை வலி யுறுத்தியுள்ளார். மேலும் உணவு வாங்குவதற்கும் வாடகை தருவதற்கும் பற்றாக்குறை ஏற்படுவதை கேலப் வேர்ல்ட் போல் சர்வே ஃபார் இந்தியா (Gallup Worldpoll Survey for India)விளக்குகிறது. அது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட காலம் 2018 முதல் 2021க்கு இடைப்பட்ட காலம்.

ஊதிப் பெரிதாக்கப்பட்ட சாதனைகளும் உண்மை நிலையும்!

மிகப்பெரிய அளவிலான சந்தையுடன், பொருளா தார வலிமையுடன் திகழும் ஏழு நாடுகளில் மிக வேக மாக வளரும் நாடாக இந்தியா இருக்க விரும்புகிறதாம். 2015 முதல் 2021 வரை ஐந்தாண்டு காலத்தில் (Multi Dimensional Poverty Index) பல பரிமாண வறுமை குறியீட்டின் அடிப்படையில் வறுமையை 9 சதவீதத்துக் கும் கீழே அது குறைத்து விட்டதாம். இது மிகவும் மிகைப் படுத்தப்பட்ட விவரிப்பு ஆகும். மாறாக உணவு மற்றும் தங்கும் இடத்திற்கான மக்களின் தேவையை நிறை வேற்றுவதில் பற்றாக்குறை தான் நிலவுகிறது.

இதுகுறித்து ஆய்வும் மக்களிடம் கருத்துக் கேட்பும் நடந்தது. பதில் அளித்தவர்களில் 40.2 சதவீதம் பேர் உணவை வாங்க போதுமான வசதி இல்லை என்று தெரி வித்தனர். 2018 ஆம் ஆண்டில் 34.7 சதவீதம் பேர் தங்கு மிட (வீடு) வாடகை தர பணம் இல்லை என கூறினர். 2021-இல் இது முறையே 48 சதவீதமாகவும் 44.3 சதவீத மாகவும் உயர்ந்தது. மிகவும் ஏழைகளாக உள்ளவர்க ளில் 22 சதவீதத்தினருக்கு உணவை வாங்க போதிய பணம் இல்லை. பணக்காரர்களில் இந்த இழப்பை எதிர் கொள்பவர்கள் 14 சதவீதம் கூட இல்லை. 2021 ஆம் ஆண்டில் இது கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டு கால இடைவெளியில் அதிக விகிதத்தில் ஏழைகள் தங்குமிடத் திற்கு பணம் செலவழிக்க முடியாமல் இருந்துள்ளனர். 

கீழ் நோக்கி பாயவில்லை!

வருமானத்தின் வளர்ச்சி மந்தமாகவே இருந்தது. அதன் பலன்கள் ஏழைகளை  சென்றடையவில்லை அதாவது (Trickle Down) கீழ்நோக்கி பாயவில்லை. சர்வ தேச விமான நிலையங்கள், புல்லட் ரயில்கள்,நெடுஞ் சாலைகள் போன்ற பகட்டான உள்கட்டமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தி, விவசாயம், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை புறக்கணிப்பதும் தான் இத்த கைய இடைவெளிக்கான முக்கியக் காரணிகள் ஆகும்.

சாதி என்னும் காரணி

சாதிவாரி கணக்கெடுப்பும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சந்திக்கும் இழப்பு குறித்த அறிக்கைகள் என்பதும் 2023-24இல் நடக்க இருக்கும் மாநில மற்றும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக செய்யப்படு கின்ற அரசியல் பிரச்சாரம் மட்டுமல்ல; சமூக, பொருளா தாரத் தளங்களில் இந்த இழப்புகள், பற்றாக்குறைகள் எப்படி வேரூன்றி உள்ளன என்ற உண்மையை வெளிப் படுத்துவதுமாகும். GWP ஆய்வுப்படி 2018ல் உண வைப் பெற பணம் இல்லாதவர்களில் கிட்டத்தட்ட 34.2 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். 32.3 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர். இட ஒதுக்கீட்டுக் குள் வராதவர்கள் 23.6 சதவீதம். பட்டியலிடப்பட்ட பழங் குடியினரின் சதவீதம் மிகவும் குறைவு. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் தொலைதூர காடு மற்றும் மலைவாழ் இடங்களில் இருப்பவர்கள். 

அங்கு உற்பத்தியாகும் உள்ளூர் உணவை உட்கொள்கிறார் கள். 2018-2021 காலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர்க ளின் பங்கு 31.5 சதவீதமாகக் குறைந்தது. பட்டியல் சாதி யினரின் பங்கு 29.9 சதவிகிதமாக குறைந்தது. இட ஒதுக்கீட்டிற்குள் வராதவர்களின் பங்கு மட்டும் இந்த காலத்தில் 30.8 சதவீதமாக உயர்ந்தது. ஓபிசி மற்றும் எஸ்.சி பிரிவினரின் இழப்பை குறைப்பதில் அரசியல் பரப்புரையாளர்கள் கணிசமான பங்கை ஆற்றி இருந்த னர். இட ஒதுக்கீட்டுக்குள் வராதவர்கள் பெரும்பாலும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொண்டனர்.

தங்குமிடம் குறித்த பிரச்சனையிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். தங்குமிடத்திற்கு தேவையான பணம் இல்லாதவர்களில் எஸ்சிக்களின் பங்கு அதிகமாக இருந்தாலும் 32.5 சதவீதம் ஓபிசிக்கள், 31.6 சதவீதம் எஸ்.சிக்கள் மற்றும் இட ஒதுக்கீட்டிற்குள் வராதவர்கள் 23.9 சதவீதம். 2021 இல் எஸ்.சி.க்களின் பங்கு சரிந்தது.  ஓபிசிக்களின் பங்கு உயர்ந்தது. இட ஒதுக்கீட்டுக்குள் வராதவர்களின் பங்கும் உயர்ந்தது. ஒருவேளை பரப்பு ரையாளர்கள் ஓபிசி மற்றும் எஸ்.சி. பிரிவினரின் உண வுப் பற்றாக்குறையை குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். தங்குமிடம் இழப்பதில் குறை வாக கவனம் செலுத்தியிருக்கக்கூடும்.

2021 இல் 25 முதல் 45 வயதிற்கு உட்பட்டோரில் சுமார் 50 சதவீதம் பேர் உணவு மற்றும் தங்குமிடம் இரண்டுக்கும் வழி இல்லாமல் வறுமையில் இருந்தனர். அவர்கள் பெற்ற சொற்ப ஊதியம் இரண்டுக்கும் அவர்கள் செய்யும் செலவை வெட்டிச் சுருக்கச் செய்துள்ளது என நாங்கள் கருதுகிறோம்

கிராமப்புற, நகர்ப்புற வேறுபாடு

உணவுக்குப் பணமில்லாத நிலையில் பெரும்பா லானோர் (அதாவது 80 சதமானம்) கிராமப்புறங்களில் குவிந்துள்ளனர். நகர்ப்புறத்தில் இவர்களின் சதவீதம் 20-க்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் நகர்ப்புறத் தில் உணவுக்குப் பணம் இல்லாதவர்களின் பங்கு உயர்ந்து கொண்டே வருகிறது. உண்மையில் அது கிரா மப்புறத்தை விடவும் இரட்டிப்பாகியுள்ளது. நகரப் புறங்களிலும் இந்த வேறுபாடு கூர்மையாகிறது. பணம் செலவழித்து தங்கும் இடத்தை பெற முடியாதவர்க ளில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் காணப் படுகின்றனர். நகர்ப்புறங்களிலும் இவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கோவிட் 19 க்கு பிறகு சிறந்த வேலை வாய்ப்பு தேடி கிராமப்புறத்தைவிட்டு நகர்ப்புறத்தை நோக்கி இடப் பெயர்வு நடந்தது.சேவைகளின் வளர்ச்சி விரிவடைந்தாலும் நகர்ப்புறத்தில் காணப்படும் பற்றாக் குறைகளுக்கு அது முக்கியமானது என கூற முடியாது.

வேலைவாய்ப்புகள் உருவாக்குவதில் தோல்வி!

தொழில்துறை, விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வி ஏற்பட்டுள்ளது. பொது விநியோக முறை அரைகுறை மனதுடனும், போதிய நிதி ஆதாரம் இல்லாமல் அமல்படுத்தப்படுவ தால் வேலையின்மையால் ஏற்படும் பாதிப்பை ஈடு  கட்ட முடியவில்லை. உணவுப் பாதுகாப்பைப் பெற இது எந்த வகையிலும் உதவவில்லை என்பதில் எந்த ஆச்ச ரியம் இல்லை. தங்குமிட பற்றாக்குறை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தால் சற்றே குறைக்கப்பட்டாலும் இதன் பொருளாதார பரிமாணம் மிகவும் சிறியதுதான்.

இந்துத்துவா, அதிகாரக் குவிப்பு, அதீதமான மையப்படுத்துதல், ஆளுமை வழிபாட்டு முறை (Personalitycult) இவைகளால் தேஜகூ மீது ஏற்பட்ட அதிக நம்பிக்கையால் எந்த ஒரு நற்பயனும் விளைய வில்லை. மாறாக, ஏழை, எளிய சாமானிய மக்கள் உணவு மற்றும் தங்குமிடம் பெறுவதில் ஒரு மிகப் பெரும் பற்றாக்குறையை இந்த நம்பிக்கை மேலும் மோசமாக்கி உள்ளது.

எதிரே உள்ள பேரழிவுப் பாதை

(தங்கள் அரசியல் நலனை மட்டும்) பாதுகாக்கும் கொள்கைகளுக்கு மீண்டும் திரும்புதல், தொழிலா ளர் சந்தைக்கான ஆரோக்கியமற்ற ஊக்குவிப்புகளு டன் அறிவிக்கப்படும் “ரோஜ்கார் மேளா” வேலை வாய்ப்பு கண்காட்சிகள், அரசியல் நோக்கத்தோடு தீர் மானிக்கப்படும் மெகா திட்டங்கள், ஒரு சில விசுவாசம் மிக்க முதலீட்டாளர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்க ளை வழங்குதல் ஆகியவை இந்த ஆட்சியின் முக்கிய கொள்கை மீறல்கள் ஆகும்.

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கை களை இது புறக்கணிக்கிறது. சமூக பாதுகாப்பு வலைப் பின்னல்களை பலவீனமாக்குகிறது. அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளில் முறைகேடுகளை புகுத்துகிறது. அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மேலும் பேரழிவு பாதையில் செலுத்துகிறது.

கட்டுரையாளர்கள்: ஆஷி குப்தா தில்லி பல்கலை. ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ்-இல் முனைவர் பட்டம் பெற்றவர்.
வாணி எல் குல்கர்னி மற்றும் ராகவ் கைகா, ஆராய்ச்சி துணை நிறுவனம், மக்கள் தொகை ஆய்வு மையம். பென்சில்வேனியா பல்கலைக்கழகம்.